திருச்சபையில்
சாதியைஒழிப்போம்
– இயேசு இயக்கம்
திருச்சபையில்சாதியைஒழிப்போம்
கிறித்தவத்துக்கும் சாதியத்துக்கும் துளிக்கூட தொடர்பில்லை.
கிறித்தவம் ஒரு சமத்துவ நெறி.
இன்றைக்கு ஆசிய கிறிஸ்தவம், குறிப்பாக இலங்கை இந்தியத் திருச்சபைகளில் சாதிய பாகுபாடுகள், சாதிய பிரிவினைகள். சாதி ரீதியான ஒடுக்குதல்கள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருச்சபை வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் மேற்கண்ட எதிர் கிறித்தவ கருத்துக்கள் வேரூன்றி காணப்படுகின்றன. அருட்பொழிவுகளில், இறைப்பணியாளர்களின் தேர்வுகளில், நிர்வாக அமைப்புகளில், திருமணத்தில் என பல்வேறு நிலையில் சாதியம் இந்திய, இலங்கை திருச்சபையை பின்னோக்கி அழைத்துச்செல்கிறது. இதற்கு மறுமொழி கொடுக்கின்ற வகையில். எமது இயேசு இயக்கத்தின் சார்பாக. #திருச்சபையில்சாதியைஒழிப்போம் எனும் முழக்கத்தை முன்வைத்துள்ளோம்.
கலை. இலக்கிய, சமூகஊடக துறைகளின் வழியே #திருச்சபையில்சாதியைஒழிப்போம் எனும் முழக்கத்தை முன்னிறுத்தி கிறித்தவத்தை கிறித்து இயேசுவின் வழியில் நடத்த உதவுவோம். சாதியத்தினால், அதன் பாகுபாடுகளினால் பாதிக்கப்படும் இறைப்பணியாளர்கள், இறைமக்கள் அனைவருக்கும் உறுதுணையாய் நிற்போம்.
மேலும் படிக்க