விண்ணகத்தைவிட எங்கள் நடுவே வசிக்க விரும்பும் அன்பின் கடவுளே, களங்கமற்ற உம் இயல்புகள் தூயதென எங்கள் வாழ்வு போற்றட்டும்! எங்கள் எண்ணங்களில் (விண்) மட்டுமே வாழும் உம் அரசு எங்கள் நடைமுறையிலும் (மண்) செயலாற்றட்டும்! உலகம் எங்களுக்குள் திணித்திருக்கும் எங்கள் ஆசைகளையல்ல எங்கள் தினசரி தேவைகளை மட்டும் நிறைவேற்றும்! பிறர் குறைகளை நாங்கள் மன்னிக்காவிட்டால் எங்கள் குறைகளையும் மன்னியாதேயும்! நாங்களே சோதனைக்குள் அகப்பட்டுக்கொள்ளாமல், நன்மையால் தீமையை வெல்லும் பொறுமையையும், புரிதலையும், அன்பையும் தாரும்! எங்களை ஆளும் அதிகாரமும் ஆற்றலும் அதின் மாட்சியும் அற்ப மனிதருக்கல்ல அவை என்றென்றும் உமக்கு மட்டுமே உரிதாகட்டும்!

<sub>கிறிஸ்து அடியான்</sub>
கிறிஸ்து அடியான்