தொடக்கக் கால திருச்சபையின் வாழ்க்கை முறை

திருமறைப் பகுதி: திருத்தூதுவர் பணிகள் 2:42-47


பெந்தெகொஸ்தே நாளில் தூய ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொண்டு பல்வேறு நாடுகளில் இருந்து வந்த மக்கள் ஏறக்குறைய 3000 பேர் மனமாற்றம் அடைந்து திருமுழுக்கின் வழியாக தொடக்கக் கால திருச்சபையில் சேர்க்கப்பட்டார்கள். இந்த பட்டறிவிற்கு பிறகு உருவான இறைமக்களைவையின் வாழ்க்கைமுறைக் குறித்து திருத்தூதுவர் பணிகள் 2:42-47யில் தூய லூக்கா பதிவு செய்கிறார்.

தொடக்ககாலதில் மனம் மாறியவர்கள், திருத்தூதர்களின் மூலம் சொல்லப்பட்ட கடவுளுடைய அதிகாரபூர்வமான போதனைக்குக் கீழ்படிந்து தங்களை மனப்பூர்வமாக திருச்சபையின் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்டனர். இந்த ‘அப்போஸ்தல’ போதனை புதிய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டது, எனவே இன்று நாமும் புதிய ஏற்பாட்டின் வழியாக அப்போஸ்தலிக்க நம்பிக்கைக்குக் கீழ்ப்படிந்து திருச்சபையாக வாழ்ந்து வருகிறோம்.

தொடக்கக் கால திருச்சபையின் வாழ்க்கை முறை பல நிலைகளில் சான்று பகரக்கூடியதாக அமைந்திருந்தன.

  1. முதலில், அவர்கள் ஒன்றாக கூட்டுறவில் கொண்டனர்; அவர்கள் நண்பர்களின் சமூகமாக இருந்தனர்.
  2. இரண்டாவதாக, அவர்கள் ‘அப்பம் பகிர்தலில்’ பங்குகொண்டனர். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நினைவு கூர்ந்து இதைச் செய்தனர், திருச்சபையில் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு கூட்டுறவு உணவாக இது அமையப்பெற்றது. இங்கு ‘பகிர்தல்’ என்பது நமக்காக உடைக்கப்பட்ட இயேசுவின் உடலைக் குறிக்கிறது.
  3. மூன்றாவதாக, ‘இறைவேண்டலில்’ தங்களை அர்ப்பணித்தார்கள். ஆரம்பகால திருச்சபை உறுப்பினர்கள் ஜெபாலயம், யூத வழிபாட்டுத்தலங்களில் நடைபெறும் பொது வழிபாட்டில் கலந்து கொண்டனர் அத்துடன் அவர்களின் வீடுகளிலும் இறைவேண்டல் செய்து உறுதியாய் நிலைத்திருந்தார்கள்
    இங்கு பேதுரு யோவேலின் இறைவாக்கினை மேற்கோள் காட்டுகிறார், பூமியில் அடையாளங்களால் அறிவிக்கப்பட்ட கடவுளின் ஆளுகையின் விடியலைப் பற்றி பேசிகிறார் . இயேசு இத்தகைய அடையாளங்களைச் செய்தார், அதன் தொடர்ச்சியாக ஆதிகால கிறிஸ்தவ சமூகத்திலும் திருத்தூதுவர்களையும் எல்லாம் வல்ல கடவுள் அருஞ்செயல்களை செய்ய வைத்தார். எருசலேமில் வாழ்ந்த மக்களை பொறுத்தவரை, இந்த அடையாளங்களை தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுதலாகவும், வரவிருக்கும் இறையாளுகையின் முன்சுவையாகவும் பார்த்தனர். இந்த அற்புதமான நிகழ்வுகளைக் கண்ட சக யூதர்கள், பிரமிப்பில் ஆழ்ந்தனர்.

தூய ஆவியின் ஆற்றல் பெற்ற தொடக்கக் கால இறைமக்கள் ‘விசுவாசிகள் ஒன்றாக கூட்டுறவு சமூகமாக இருந்தார்கள் வாழ்ந்தார்கள்’ அந்த ஒற்றுமை, ஆரம்பகாலத்தில் கிறிஸ்துவின் வருகை உணர்வை மேம்படுத்தி வலுப்பெற செய்தது, அதனால் தனிப்பட்ட சொத்துக்களை விற்றனர். அவர்கள் ‘எல்லாவற்றையும் பொதுவாகக் கொண்டிருந்தனர்’, அவர்கள் தங்கள் உடைமைகளை அனைவருக்குமான உடைமையாக, சொத்தாகக் கருதினர். இதன் விளைவாக, அவர்கள் தங்கள் சொத்துக்களை விற்று, பிறரின் தனிப்பட்ட தேவைக்கேற்ப பிரித்துக் கொண்டனர்.

இறுதியாக அன்பான எனக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே
நீங்களும் நானும் பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருக்கிறோமா?
அப்படி இருந்தோம் என்றால் பரலோகராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது.


நாம் ஒவ்வொருவரும் நற்செய்தியை நம்புகிறவர்களாக மாற வேண்டும்
பாவ மன்னிப்பின் நிச்சயத்தை சாவதற்கு முன் பெற்றுக்கொள்ள வேண்டும் அப்போதுதான் நாம் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறமுடியும். எமது வாழ்க்கையின் அடிப்படை திருமறையே. எமது திருச்சபை வாழ்வு, குடும்ப வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு கிறிஸ்துவில் வேரூன்றிய வாழ்வாக இருக்கவேண்டும். கடவுளின் திருச்சபையாகிய இவ்வுலகில் பிறர்பால் அக்கறைக்கொண்டு எல்லோரையும் ஏற்றுக்கொள்ளுவோம். இறைவேண்டலின் சமூகமாக நாம் மாறுவோம், கடவுளுடைய சித்தத்திற்கு எம்மை ஒப்படைத்து இறையாளுகையான பரலோகராஜ்யத்தை இம்மண்ணில் நிறுவுவோம்.

ஜெபசிங் சாமுவேல்

இயேசு இயக்கம்