ஆழங்களுக்கு போவோம் வாருங்கள்

நூல் அறிமுகம்

நம் ஆண்டவர் இயேசு தம் சீடரிடம் ” ஆழத்திலே போய் வலையை போடுங்கள் “என்றார். அதற்கு அவர்கள் கீழ்ப்படிந்தால் நிறைய மீன்களை பிடித்தனர். இன்றைய திருச்சபையிலும் திருப்பணியாளர்கள் இடையேயும் ஆழங்களுக்கு போகின்ற துணிச்சல் மிகவும் குறைவாக உள்ளது. திருமறையைக் கற்பதிலும் அதனை அன்றாட வாழ்வோடு பொருத்தி பார்ப்பதிலும் ஆழமற்ற மேலெழுந்த வாரியான ஒரு நிலையை நாம் காண முடிகிறது. எனவே இந்த சிந்தனைகளுக்கு சவால் விடும் வகையில் தமிழ்நாடு இறையியல் கல்லூரினுடைய முன்னாள் முதல்வர், புதிய ஏற்பாட்டுத் துறைப் பேராசிரியர், மதுரை முகவை பேராயத்தின் ஆயர், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக இசை வழியில், இறையியல் வழியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகளைச் செய்து வருகின்ற அண்ணன் அருட்பணி. முனைவர். மா. ஞானவரம் அவர்கள் இந்நூலை எழுதி இருக்கிறார்கள். எனவே இதைப் படித்து நீங்கள் அனைவரும் பயன்பெறும் படி உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

மா. ஞானவரம்

அருட்பணியாளர்,
புதிய ஏற்பாட்டுத் துறைப் பேராசிரியர்,