24 டிசம்பர் 2023

அகமகிழுங்கள் ஆண்டவர் அருகிலுள்ளார்

Rejoice, the Lord is Near

யோவான் 16:16-24

•          சகரியா 2:6-13 வரையுள்ள பகுதியில், சிறப்பாக தீர்க்கன் பாபிலோனியா அடிமைத்தனத்திலிருந்து இஸ்ராயேல் மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு வந்திருக்கின்ற வேளையில் மீட்பரைக் குறித்த வாக்குத்தத்தத்தை எடுத்துக் கூறுகிறார். சீயோன் குமாரத்திக்கு பட்ட துன்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு சமாதானம் வழங்குவதற்காக மீட்பர் அருகிலிருக்கிறார் என்ற செய்தி பகிரப்படுகின்றது.

•          திருப்பாடல் – சங்கீதம் 50இலும், மீட்பரின் வருகை மக்களுக்கு மகிழ்ச்சியையும் விடுதலையையும் அளிக்கும் ஒன்று எனக் காட்டப்படுகின்றது.

•          1 தெசலோனிக்கேயர் 5:5-24ல், மீட்பரின் வருகைக்காக நாம் எம்மை ஆயத்தப்படுத்த அழைக்கப்படுகின்றோம். அறம் சார்ந்த நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டு நல்லொழுக்கம், நன்மதிப்பு போன்றவற்றை வளர்த்துக் கொள்வது மீட்பரின் வருகைக்காக எம்மை ஆயத்தப்படுத்தும் ஒரு செயலாகும்.

•          யோவான் 16:16-20ல், ஆண்டவர் இயேசு இவ்வுலகைவிட்டு விண்ணகத்தை நோக்கி புறப்படப்போகிறேன் என்று சொன்ன வேளையில் சீடர்கள் துயரப்பட்டார்கள். அப்பொழுது நான் உங்களுக்கு ஒரு மீட்பரை தூய ஆவியரை தருவேன் என்று இயேசு வாக்களிக்கிறார். எனவே மீட்பரின் வருகை யோவான் 16:20ன்படி, உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும். எனவே, அவரின் வருகையால் துக்கம் சந்தோஷமாகவும் அவநம்பிக்கைகள் நம்பிக்கையாகவும் மாறும் என இப்பகுதிகளில் நாம் படிக்கின்றோம். ஆமேன்.