மேலறைப் பேச்சு 1

லெந்து காலத்தின் முதல் நாள் தியானம்
திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 1-5

இயேசு எல்லாம் தெரிந்தவர். தான் சர்வ வல்லவர் என்றும் பிதாவுடன் நீங்காத உறவிலிருப்பவர் என்றும் அறிந்திருந்தும் அவர் தம்முடையவர்களிடம் அன்பு கூர்ந்தார். அன்பின் வெளிப்பாடாக அவர் ஒரு வேலைக்காரனைப்போல அவர்களின் கால்களைக் கழுவினார். பணியே அன்பின் வெளிப்பாடு என்று அவர் போதித்தார்.

தங்கை, தம்பி, நீ கடவுளுடைய பிள்ளையானால் உன்னைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? இயேசு போதித்த அன்பின் மகத்துவத்தை கற்றுக்கொண்டாயா? நீ நேசிக்கும்படி உனக்கு கடவுள் கொடுத்த மக்களுக்கு அன்பினாலே ஊழியம் செய்வாயா?

இறைவேண்டல்:

இறை மைந்தனான இயேசுவே, நீர் சர்வ வல்லவர், இறைவனுடன் இசைந்திருப்பவர். ஆயினும் நீர் அன்பிலே பணியாற்றினீர். உமது மாண்புமிகும் தெய்வீக அன்பு ஏழ்மையான பணியாள் உருவிலே வெளிப்பட்டதே! என்னுடைய உள்ளத்திலும் சிந்தையிலும் உம் தூய ஆவியை ஊற்றும், ஐயா, நீர் என்னை நேசித்தது போல நான் மற்றவர்களை நேசிக்குமளவுக்கு என்னை நொருக்கி உருவாக்கும் சுவாமி.

இயேசுவின் பதில்…….

என் குழந்தாய், என் பிதா அன்பாகவே இருக்கிறார் ஆகவே நான் உன்னில் அன்பு கூர்ந்தேன். நான் நேசிப்பது போல நீயும் நேசிக்க வேண்டும் என்பதற்குதான் இந்த பணியாள் பாடம். வா, குழந்தாய் என்னோடு கை கோர்த்து அன்பு செலுத்து; இசைந்து பணியாற்று. நான் உன்னோடுதான் என்றும் இருக்கிறேன்.

பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்
பேராயர் ஜேம்ஸ் சீனிவாசன்

தென்னிந்தியா