வசந்தகாலப் பூக்கள் 8

எட்டாம் தியானம்

பொதுவாக நீ சொந்தக்காலில் நிற்கவேண்டும். சுயமாக உன்னுடைய வேலையை செய்ய வேண்டும் என கூறுவதை நாம் கேட்டுள்ளோம். ஆனால், எமது ஆன்மீக வாழ்வில் சுயபலத்தில் செய்யும் காரியங்கள் தோல்வியில் முடிவடைவதை நாம் காண்கின்றோம். 
பேதுரு சில சந்தர்ப்பங்களில் சுயபலத்தில் காரியங்களை செய்ய முற்பட்டதை நாம் காண்கின்றோம். மத்தேயு 14:25ல் ஆண்டவர் இயேசு கடலில் நடக்கின்றார் எனக் கண்ட பேதுரு தானும் கடலில் நடக்க முற்பட்டான். நிறைவில் அவன் கடலில் அமிழ்ந்து போகும் வேளையில் ஆண்டவரே என்னை இரட்சியும் எனக் கூக்குரலிட்டான் (மத்தேயு 14:25).
எமது ஆன்மீக வாழ்வில் சுயபலத்தில் காரியங்களை செய்ய முற்பட்டு அவற்றில் நாம் பல தோல்விகளை அடைந்துள்ளோம் அல்லவா? எனவே, திராட்சை செடியாகிய கிறிஸ்துவில் கொடிகளாகிய நாம் இணைந்து செயற்பட முற்படுவோமாக. 

செபம்: இறைவா என் சுயபலத்தில் அல்ல மாறாக உன் பெலத்தில் நிலைத்து நிற்க அருள் புரிவாயாக.