முழக்கம் 02

கிறித்தவம் ஒரு சமத்துவ நெறி.
அதில் சாதி இல்லை.


இருப்பினும் கிறித்தவரிடையே சாதி உண்டு!
சாதியின் வேரான அகமணமுறை

கிறிஸ்தவரிடம் நடைமுறையில் உள்ளது.


இம்மண முறையால் கிருத்தவர் இடையே
சாதி அமைப்பு மறு உற்பத்தி செய்யப்படுகிறது.

இல்லறம், துறவறம், சீடத்துவம், திருஅவை நிர்வாகம்
அனைத்திலும் சாதி அமைப்பு முகம் காட்டுகிறது.


இந்திய இலங்கை கிறித்தவத்தின் ஆன்மாவை
சாதிய அமைப்பு அரித்து வருகிறது.
இதனால் குறித்த உயர் நெறி
சாதி அமைப்புடன் சமரசம் பேச வேண்டிய இழிநிலை.

கிறித்தவமும் சாதியம். பொருந்தி வாழலாம் என்பது பொய்
ஒளியும் இருளும் இணைந்து வாழ இயலாது.

கிறித்தவமும் சாதியும் ஒன்று குடித்தனம் செய்ய இயலாது.


கிறித்தவர்கள் சாதி பாராட்டலாம் என்பது இடமாறு தோற்றப் பிழை!
இந்தியாவில் இலங்கையில் சாதி ஒரு சமூகப்பிழை
கிறித்தவத்தில் அஃது ஓர் ஆன்மீக பிழையும் கூட.

நன்றி: சாதி மறுப்பு- கிறிஸ்தவத்தின் நிபந்தனை நூல்.

சாதியம் கிறிஸ்துவுக்கு எதிரான கோட்பாடு
என்பதை உரக்க சொல்லுவோம் !!

சாதிய மறுப்பு கிறிஸ்தவத்தின்
நிபந்தனை உலகறிய செய்வோம் !!

#திருச்சபையில்சாதியைஒழிப்போம்.