தமிழ்நாடு அரசின் உபதேசிரியார் நல வாரியத்தின் உறுப்பினர்களாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தென்னிந்திய திருச்சபையின் சார்பாக அருட்பணி. பிரேம் கிறிஸ்துதாஸ், அருட்பணி. சாமுவேல் புனிதராஜ், திரு. சாமுவேல் கிருபாகரன், திரு. பிரேம்குமார் ராஜாசிங், திரு. பிரபாகர் ஆகிய ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இன்று (07. 03. 2024) தென்னிந்திய திருச்சபையின் தலைமை அலுவலகத்தில் தங்கள் பெயர்களை தமிழ்நாடு அரசிற்கு பரிந்துரை செய்த மாண்புமிகு தென்னிந்திய திருச்சபையின் பொது செயலர் வழக்குரைஞர். சா. பெர்ணான்டஸ் ரத்தின ராஜா அவர்களை சந்தித்து வாழ்த்துக் கூறி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தென்னிந்திய திருச்சபை மக்களிடையே பொது செயலர் வழக்குரைஞர். சா. பெர்ணான்டஸ் ரத்தின ராஜா அவர்களின் இந்த பெரும் முயற்சியினால் தமிழ்நாட்டில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாடு அடையும் என்பது மிக மகிழ்ச்சியான செய்தி.

தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள்,பணியாளர்கள் நல வாரியம்- அரசின் சார்பில் வழங்கும் சலுகை எவை?

கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் இணைபவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

https://cms.tn.gov.in/sites/default/files/go/bcmbc_t_09_2022.pdf

இந்நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேற்காணும் திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

அதன் விவரம் பின்வருமாறு,

  • கல்வி உதவித்தொகை – 10 ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு வரை
  • விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித் தொகை ரூ.1,00,000/-
  • விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10,000/- முதல் ரூ.1,00,000/- வரை
  • இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20,000/-
  • ஈமச்சடங்கு உதவித்தொகை ரூபாய் 5,000/-
  • திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3,000/- மற்றும் பெண்களுக்கு ரூ.5,000/-
  • மகப்பேறு உதவித்தொகை ரூபாய் 6,000/- மற்றும் கருச்சிதைவு/ கருக்கலைப்பு உதவித்தொகை ரூபாய் 3,000/-
  • கண் கண்ணாடி உதவித்தொகை ரூபாய் 500/-
  • முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூபாய் 1,000/-
  • மேலும் விவரங்களுக்கு அந்ததந்த மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இந்நிலையில், திருச்சபை பணியாளர்களின் நலன் கருதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு இக்கோரிக்கைகளை எடுத்துக் கூறி அதற்கு உருவாக்கம் தந்த மாண்புமிகு திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மற்றும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் முனைவர் இனிகோ இருதயராஜ் அவர்களை மாண்புமிகு தென்னிந்திய திருச்சபையின் பொது செயலர் வழக்குரைஞர் சா. பெர்ணாண்டஸ் ரத்தின ராஜா அவர்களின் தலைமையில் அனைத்து உபதேசிரியார் நல வாரிய உறுப்பினர்கள் நேரில் அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறினார்கள்.