25 ஜுலை 2022


திருத்தூதுவரும் இரத்த சாட்சியுமாகிய யாக்கோபு
மாற்கு 10:35-45

• திருமறையில் யோவானின் சகோதரனாகிய யாக்கோபு, இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு போன்ற யாக்கோபுகள் காணப்படுகின்றனர். இங்கு யோவானின் சகோதரனாகிய யாக்கோபுவையே நாம் நினைந்து கொள்கின்றோம். இவர் கி.பி. 44ம் ஆண்டு ஏரோதுவினால் வாளால் வெட்டப்பட்டு சிரைச்சேதம் செய்யப்பட்டார். இதனை, திருத்தூதர்பணிகள் அல்லது அப்போஸ்தலர் 11:27-12:3 என்ற பகுதியில் காணலாம். இவரே இயேசுவின் சீடர்களுக்குள் முதலாவது இரத்தசாட்சியாக மரித்தார்.

• மாற்கு 10:35-45 வரையுள்ள பகுதியில் செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபுவும் யோவானும் இயேசுவினிடத்தில் வருகை தந்து அவரை நோக்கி, மாட்சிமையான அனுபவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டபோது, இயேசு அவர்களை நோக்கி, துன்பக் கிண்ணத்தில் பருக முடியுமா? என்று கேட்டார். அதற்கு இவர்கள், ஆம் எனப் பதிலளித்தனர். அவ்வாறாகவே, யாக்கோபு துன்பத்தினூடாக இரத்தத்தினால் ஆகிய திருமுழுக்கை பெற்றுக் கொண்டார்.

• முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி எரேமியா 26:10-15 பாபிலோனிய அடிமைத்தன மக்கள் மத்தியில் திருப்பணி ஆற்றுவதற்காக எரேமியா அனுப்பப்பட்டார். இவர் வழமைக்கு மாறாக இஸ்ரயேல் மற்றும் யூதா போன்ற மக்களுக்கு எதிராக இறைவாக்கு உரைத்தார். இதனால், இவரையும் மக்கள் வெறுத்தனர். பின்னர் இதற்காகவே இவரையும் துன்புறுத்தினர்.

ஆக்கம்: அற்புதம்